Sunday, February 13, 2011

இறைவா

வரம் கொடுக்கும் ஆற்றல் இல்லை என்றால்
உன்னை புகழ்வார் உண்டோ உலகில்...........
வாழ்த்தொலிக்கு மயங்கி வரம் தருவாய் என்றால்
நீயும் சுயநல உலகின் சூழ்ச்சியில் சிக்கிய மானிடமே..........இறைவா

முற்றும் அறிந்தவன் நீ என்றால் .............எதற்காய்
முற்றும் திறந்தவரை இங்கு படைத்தாய் ..........அவர்
உலகில் சிக்கி மடியும் வரை.................. ஏன்
வரம் வேண்டி கையேந்த வைத்தாய்................

உன் வர அறையை பூட்டிவைத்துகொள்............அன்றேல்
இறை பக்தர்களை விட
இறை கள்வர்கள் வாழும் பூமி நீ காண்பாய்
சாவியை முடிந்தால் என்னிடம் தந்துவை





No comments: