Sunday, February 20, 2011
பதுக்கும் விலங்கு
அடங்காத வரை நான் கவிஞன் ஆகிறேன்
அடங்கிய பின் நான் கழுதை அகிறேன்
வாழ்கையில் நான் ஓட நினைக்கிறேன்
ஓட முன் பாடநினைக்கிறேன்
பாடிய பின் பணத்தை பார்க்கிறேன்
பணத்தை கண்டதும்
பதுங்க நினைக்கிறேன்
பதுங்கிய பின் பதுக்க நினைக்கிறேன்
மனிதன் பணத்துக்குள்
உணர்வை பதுக்கும் விலங்கு!
புது கவிஞ்ஞன் ... புரட்சி கவிஞ்ஞன்
வாய்த்த தமிழ் அத்தனையும் வாய் புகழாய் போகட்டும்
விட்ட தமிழ் வீண் கதையாய் போகட்டும்
அன்னை தமிழ் கவி நான் உரைத்தால்
அற்ற தமிழ் என்று விட்ட யாப்பில் வைப்பீர் என்றால்
கொற்ற தமிழில் நான் சொல்வேன்
குனிந்து நீர் படுமென்று
ஆன்மீக சர்வாதிகாரி
ஆயுதத்தால் எனை அடக்கியவன்
ஆயுத சர்வாதிகரி
ஆன்மீகத்தால் என்னை அடக்குபவர்
ஆன்மீக சர்வாதிகாரி
மயக்குவதும் மந்திரிப்பதும்
பொல்லா பாவம்
ஆண்டவனே எமை அடக்க நினைபதிலை
அவனுள் நாம் அடங்கியதும்
அடங்கியவரை அவன் அழிப்பதும் இல்லை !
Subscribe to:
Posts (Atom)